Wednesday, May 26, 2010

எஸ்எஸ்எல்சி நெல்லை மாணவி ஜாஸ்மின்முதலிடம்




பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர். 494 மார்க்குகள் பெற்று சிவப்பிரியா ( வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி தாளப்பட்டி கரூர் ), , நிவேதா ( பாத்திமா மேல்நிலைப்பள்ளி கூடலூர்), பிரியங்கா ( ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மடிப்பாக்கம் செங்கல்பட்டு), தமிழரசன் ( நேஷனல் மேல்நிலைப்பள்ளி அபிஷேகபாக்கம் புதுச்சேரி ), ஆகிய 4 பேர் 2 வது இடத்தை பிடித்துள்ளனர்.



3 வது இடத்தை பிடித்த 10 பேர் : 493 மார்க்குகள் பெற்று 10 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். இதிலும் 7 மாணவிகள் தங்களது 3 வது இடத்தை பிடித்தனர். ரம்பயா (ஏ.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி புளியங்குடி தென்காசி ), ‌‌ஜெயலினி (சாராள் டக்கர் மேல்நிலைப்பள்ளி பாளையங்கோட்டை ), திலகவதி (ஏ.வி., மேல்நிலைப்பள்ளி பரமக்குடி), பிரதீப்குமரார் (சவுராஷ்ட்டிரா மேல்நிலைப்பள்ளி பரமக்குடி ), ஜெயமுருகன்(நாடார் மேல்நிலைப்பள்ளி சவுத்கேட் மதுரை ), நாகராஜன் (செயிண்ட்மேரிஸ் மேல்நிலைப்பள்ளி மதுரை) , இந்துஜா (லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி அனியாபுரம் நாமக்கல்), ராஜ்சூர்யா ( சேரன் மேல்நிலைப்பள்ளி , புன்னம்சத்திரம், கரூர் ), ரேவதி (விவேகானந்தன் மேல்நிலைப்பள்ளி செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி) , நசுரின்பாத்திமா (செயிண்ட் ஜோசப் மேல்நி‌லைப்பள்ளி ஆரணி, செயயாறு ), ஆகிய 10 பேர் 3 வது இடத்தை பிடித்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவர்கள் 79. 4 சதமும் மாணவிகள் 85. 5 சதமும் ‌தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீதத்திற்கு மேலாக 4 லட்சத்து 17 ஆயிரத்து 371 மாணவ, மாணவிகள் மார்க்குகள் பெற்றுள்ளனர். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மார்க்குகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 2 ஆயிரத்து 399 பேர் ஆவர் .


இரவு ஒரு மணி வரை படித்தேன் மாணவி ஜாஸ்மின் பேட்டி :

முதலிடம் பெற்ற ஜவுளி வியாபாரி மகள் பேட்டி: தான் இரவு ஒரு மணி வரை கண்விழித்து படித்தேன் என மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறினார். டவுண் அருகே உள்ள கல்லணையில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இரவு 1 மணி வரை படித்தேன் . காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத்துவங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எனது வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உறு துணையாக இருந்தனர். நான் 498 மார்க்குள் வரும் என எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படிப்பதே எனது இலட்சியம். இவ்வாறு ஜாஸ்மின் கூறினார்.

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator