Friday, May 7, 2010

ஒற்றுமை வலிமையை உலகிற்க்கு உணர்த்துவோம்.....


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
 
 
21 March 2010 பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க,
 
கூட்டத்தில் பேரா.அப்துல்லா உரையில் கூறிய முக்கியமான கருத்து:---
 
உரையாற்றிய பேரா.அப்துல்லாஹ், இஸ்லாத்தை ஏற்க தன்னை ’இறைவன்’ தூண்டியதாகவும் ‘முஸ்லிம்கள்’ எவரும் தூண்டவில்லை என்றார்.

தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக இருக்கும் ‘குழு மனப்பானமை பற்றி வருந்தினார்.குறிப்பாக, ரியாதிலிருந்து தாயகம் திரும்பிய அவரை வரவேற்க சென்ற முஸ்லிம்கள், அமைப்பு-இயக்க அடிப்படையில் தனித்தனி குழுக்களாக வந்திருந்ததையும் - எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த ‘இந்து முன்னனியினர்’ மட்டும் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக குழுமியிருந்ததையும் குறிப்பிட்டார்.
 
இதனை நாம் சிந்திக்க வேண்டும்.
 
எனது முஸ்லிம் சமுதாயமே ! 
 
பிரிந்து கிடப்பவர்களை இறை உவப்பை சொல்லி ஒன்றினைக்கக்கூடிய இஸ்லாம் மார்க்கம்.
எல்லா வகையிலும் ஒற்றுமையை முதன்மையாக கூறும் இஸ்லாம் என்ற அழகிய மார்க்கத்தில் நாம் இருக்கிறோம்.
 
ஆகவே, இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்லாம் சமுதாயத்தின் ஒற்றுமை வலிமையை உலகிற்க்கு உணர்த்துவோம்.
 
 
ஓன்றினைந்து போராடுவோம் - இறை உதவியை பெற்றிடுவோம்.

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator