Saturday, December 10, 2011

வெள்ளிவிழா கொண்டாட்டம்

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 21 ஜனவரி 2012 அன்று நமது பள்ளியின் 25 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

நற்பணி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், இந்நாள் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், குறிப்பாக இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என என்றென்றும் விரும்பும் உள்ளூர் வெளியூர் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் பேராதரவையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் விழா மலர் வெளியிட இருப்ப்தால் நண்பர்கள் தங்களின் படைப்புகளை சமர்பிக்கலாம் விருப்பமுள்ளவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்.
வெள்ளிவிழா குழு

 

CMN SALEEM - COUNSELLING

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21 ஜனவரி 2012 அன்று பகல் C M N சலீம் ( கல்வி வழிகாட்டி) அவர்கள்  மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை எப்படி திட்டமிடுவது என்பது குறித்து பயனுள்ள கலந்துரையாடல் நடத்த உள்ளார்கள். மேற்படி நிகழ்வில் பங்கு கொண்டு  பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
Venue : Youth Welfare Matric School ,Govindakudi

Friday, November 11, 2011

இஸ்லாமிய குண நலன்கள்


1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)

பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)

தீய குணங்கள்


1 . தற்பெருமை

(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமை

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்

எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி – 

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)
10. பரிகாசம்

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)

நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டை

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்

குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15. கெட்ட பார்வை

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)


நற் குணங்கள்

1. நிதானம்

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)

2. எளிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3. தூய்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்

மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5. நாவடக்கம்

இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6. அன்பாக பேசுதல்

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. பிறருக்கு உதவி புரிதல்

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8. உண்மை பேசுதல்

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)

விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

9. நன்றி செலுத்துதல்

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10. வெட்கப்படுதல்

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)
11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி

13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்

Thursday, November 10, 2011

ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் : ஆதார் அடையாள அட்டை!



இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

 27.10.2011 முதல் தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

 நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது.


 கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். -

http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf 

கார்டு பெற தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

http://uidai.gov.in/images/FrontPageUpdates/proof_of_identity_documents_supported.pdf

Thursday, October 20, 2011

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது:: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்









---------- சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது:
வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்


பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில்
பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது
சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில்
முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு
செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா
மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,


* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில்
மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.


* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால்
போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக்
கொடுக்க வேண்டியதில்லை.


* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு
கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா
மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.


* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று,
தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப்
பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க
வேண்டும்.


* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை,
தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை
தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.


ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும்.
அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார்
பதிவு செய்ய வேண்டும்.


* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது
வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை
வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.


* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில்
இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.


இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ்
பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா
பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம்
மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும்
நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும்
பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச்
சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக
மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.


மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு
விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக்
கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா
பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை,
பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு
செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு
ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து
வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது
தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே,
பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம்
விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில்
சிக்க வாய்ப்பில்லை.



Thursday, September 29, 2011

உலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்





லக சமயங்கள் மற்றும் பொதுவாழ்வுக்கான ஆய்வு மையம் 'பியூ' [PEW] எனும் அமெரிக்க அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் பரபரப்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம் என்கிறது அந்த ஆய்வு.

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 150கோடியைத் தாண்டுகிறது. அதாவது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பாகம் முஸ்லிம்கள் ஆவர். இவர்களில் சன்னி முஸ்லிம்கள் 140 கோடி. அதே நேரத்தில்,உலக கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை 130 கோடி ஆகும்.

பியூ மைய ஆய்வாளர்கள் கடந்த மூன்றாண்டுகளாக 232 நாடுகளிலும் பகுதிகளிலும் மேற்கொண்ட ஆய்வில் இந்தப் புள்ளிவிவரம் கிடைத்தது. ஆயினும்,உண்மையில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்கிறார் ஆய்வாளர்களில் மூத்தவரான பிரியன் கிரைம். ஏனெனில்இந்த ஆய்வெல்லாம்2009 மக்கட் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் அவர்.

எடுத்துக்காட்டாகஐரோப்பாவில் பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்கிறது இந்த ஆய்வு. 2001ஆம் ஆண்டு பிரிட்டனில் 16 லட்சமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2011லும் அதே அளவில் உள்ளதாக இந்த ஆய்வு காட்டுகிறது. உண்மையில் பிரிட்டனில்25 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 80 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால்பியோவின் ஆய்வில் 46 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாரஷியா ஆகிய நாடுகளின் முஸ்லிம்கள் எண்ணிக்கையிலும் இதே நிலை காணப்படுகிறது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பத்து பெரிய நாடுகள் ஆசியாவில்தான் உள்ளன. எகிப்துஅல்ஜீரியா,மெராக்கோதுருக்கி போன்ற நாடுகளும் இவற்றில் அடங்கும். உலக முஸ்லிம்களில் 20 சதவீதம்பேர் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில்தான் உள்ளனர். அதாவது உலக முஸ்லிம்களில் ஐவரில் ஒருவர் இந்நாடுகளில் வசிக்கின்றார். 62 விழுக்காடு முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் மேற்கே துருக்கி முதல் கிழக்கே இந்தோனேஷியா வரை பரவியுள்ளனர்.

ஆனால்இந்த ஆய்விலிருந்து சில உண்மைகள் வெளிப்பட்டுள்ளனஅவற்றை ஆய்வுக் குழுவால் மறைக்க முடியவில்லை. முஸ்லிம்கள் என்றாலே அரபியர்தான்அரபியர் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற வாதம் தவறு என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. ஆம்! உலக முஸ்லிம்களின் எண்ணிக்கையில் ஒரு சிறு விழுக்காடுதான் மத்திய கிழக்கு நாடுகளான அரபுநாடுகளில் இடம்பெறுகிறது.

உலக முஸ்லிம்களில் ஷியா பிரிவினர் வெறும் 10 விழுக்காடு முதல் 13 விழுக்காடுதான். ஷியா முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் உலகில் ஈரான்பாகிஸ்தான்இந்தியாஇராக் ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கின்றனர்.

ஆகஇஸ்லாம் உலக மதங்களில் இரண்டாவது பெரிய மார்க்கமாகும். கிறித்தவம் -அதன் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து- உலகின் முதலாவது பெரிய மதமாகும். உலகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை 202 கோடி ஆகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு வாடிகன் வெளியிட்ட ஓர் அறிக்கை பின்வருமாறு அங்கலாய்க்கிறது: கத்தோலிக்கத்தை இஸ்லாம் முந்திவிட்டது. 1900ஆம் ஆண்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் உலக மக்கள் தொகையில் 12.3 விழுக்காடு இருந்தனர். அண்மையில் இது இரட்டிப்பாகி உள்ளது. உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 11 சதவீதம் உயர்ந்து 23 சதவீதத்தை எட்டிவிட்டது.

இந்த உயர்வு பழைய முஸ்லிம்களின் பெருக்கம் மட்டுமே என்றும் யாரும் கருதினால் அது உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு. வேறு மதத்தார் இஸ்லாத்தில் அதிக எண்ணிக்கையில் இணைந்துள்ளனர் என்பதையே இந்த உயர்வு காட்டுகிறது.

பியூ அமைப்பின் துணை மேலாளர் அலன் கூப்பர்மன் [Alan Cooperman] குறிப்பிடுகிறார்: ஐரோப்பிய முஸ்லிம்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றே பலரும் கருதுகின்றனர். இது மேற்கு ஐரோப்பாவிற்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஐரோப்பாவின் மற்றப் பகுதிகளான ரஷியாஅல்பானியாகுசோவா ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அங்குள்ள பூர்வீகக் குடிகளே. ஆகஐரோப்பிய முஸ்லிம்களில் பாதிக்கும் அதிகமானோர் மண்ணின் மைந்தர்கள்தான். மேற்கு ஐரோப்பாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
கூப்பர்மேன் மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறார்: சில நாடுகள் பற்றி'முஸ்லிம் நாடுகள்' என்ற எண்ணமே யாருக்கும் தோன்றாது. ஆனால்அங்கெல்லாம் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியாரஷியாசீனா ஆகிய நாடுகள் எடுத்துக்காட்டுகளாகும்.
ஆனால்அவர் குறிப்பிடும் நாடுகளில் இஸ்லாத்தின் அழுத்தமான வேர்கள் பரவியிருப்பதை வரலாறு கூறும். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் 1 கோடியே 61 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதாவது இந்தோனேசியாபாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான். பெரிய அரபு நாடாகக் கருதப்படும் எகிப்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இது இரு மடங்காகும்.

அவ்வாறேஜெர்மனில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கைலெபனானில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிடப் பெரியது. ஜோர்தான்லிபியா ஆகிய இரு நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கையைவிட ரஷிய முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட எத்தியோப்பியா முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகம். சிரியா முஸ்லிம்களைவிட சீன முஸ்லிம்கள் அதிகம்.

சீனாவில் முஸ்லிம்கள் 2.2. கோடிபேர் உள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்தாலும், 5 கோடிபேர் இருக்கலாம் என்கின்றன கணக்கெடுப்புகள். சீனாவிலுள்ள முஸ்லிம்கள் அமைப்பு ஒன்றுசீனாவில் 10கோடி முஸ்லிம்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

சீனாவுக்கும் இஸ்லாத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. ஹிஜ்ரீ 29ஆம் ஆண்டிலேயே கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் சீனாவுக்கு ஒரு குழுவை அனுப்பினார்கள். நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தலைமையில் சென்ற அக்குழுவினர்அப்போதைய சீனப்பேரரசர்'வீ'யைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தனர். அவர் இஸ்லாத்தின் கொள்கைகளைக் கேட்டு வியந்துபோனார். அத்துடன் கான்தூனில் ஒரு பள்ளிவாசலை எழுப்புமாறு ஆணையிட்டார். அது 15நூற்றாண்டுகளாக சீனாவில் இஸ்லாத்தை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது.

சோவியத் ஒன்றியம் சிதைந்தபிறகு ரஷியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2 கோடி ஆகும். ஆனால், 1.65 கோடி என்கிறது பியூ அறிக்கை. சுமார் 10 லட்சம் முஸ்லிம்கள் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் வாழ்கின்றனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே ரஷியாவில் இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது. கி.பி. 642ஆம் ஆண்டில் ஆதர்பீஜானில் முஸ்லிம்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. 1924 புரட்சிக்குப் பிறகு முஸ்லிம்கள் பகுதிகளில் உரிமைகள் பறிக்கப்பட்டன. வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. பல பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன.

இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். எத்தியோப்பியா: 2.8 கோடி (மொத்த மக்களில் 34 விழுக்காடு);தான்ஸானியா: 1.3 கோடி (30 விழுக்காடு);ஐவரிகோஸ்ட்: 80 லட்சம் (37 விழுக்காடு)மொஸம்பிக்: 50 லட்சம் (23 விழுக்காடு)பிலிப்பைன்: 40.7லட்சம் (5%) ஜெர்மன்: 40 லட்சம் (5%).

எல்லாம் சரி! இவ்வளவு பெரிய வலுவான சக்தியை உலக அளவில் ஒருங்கிணைக்க யாருமில்லையே! நமது பலத்தை உலகம் அறிந்துள்ளதாநமது குரலுக்கு மரியாதை உள்ளதாஐக்கிய நாடுகள் சபையில் 'வீட்டோ' அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவி பாதுகாப்பு மன்றத்தில் முஸ்லிம்களுக்கு உண்டாஅதில் ஐ.நா.வுக்கு அடுத்து பெரிய அரசு அமைப்பாக விளங்கும், 57 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்புக்கு ஐ.நா.வில் அங்கம் உண்டா?

கண்டங்கள் வாரியாக முஸ்லிம்கள்:







பகுதி
முஸ்லிம் எண்ணிக்கை (மில்லியனில்)
அப்பகுதியில் முஸ்லிம்களின் விழுக்காடு
உலகில் முஸ்லிம் விழுக்காடு
ஆசியா - மத்திய தரை
972.6
24.1%
61.9%
மத்திய கிழக்கு - வட ஆப்பிரிக்கா
315.3
91.2%
20.1%
ஆப்பிரிக்கா (பாலைவனம்)
240.6
30.1%
15.3%
ஐரோப்பா
38.1
5.2%
2.4%
அமெரிக்கா
4.6
0.5%
0.3%
மொத்தம்
1571.2
23%
100%

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகள்:








நாடு
முஸ்லிம்களின் எண்ணிக்கை (மில்லியனில்)
நாட்டில் முஸ்லிம்கள் விழுக்காடு
இந்தோனேசியா
203
88.2%
பாகிஸ்தான்
174
96.3%
இந்தியா
161
13.4%
பங்களாதேஷ்
145
89.6%
எகிப்து
79
94.6%
நைஜீரியா
78
50.4%
ஈரான்
74
99.4%
துருக்கி
74
98%
அல்ஜீரியா
34
98%
மொராக்கோ
32
99%

















Friday, September 16, 2011

Dear All,


U MIGHT RECEIVED THIS EARLIER, BUT STILL A GOOD INFO TO SHARE

GSM Awareness


cid:1.3205252287@web94712.mail.in2.yahoo.com

cid:2.3205252288@web94712.mail.in2.yahoo.com
cid:3.3205252288@web94712.mail.in2.yahoo.com
cid:4.3205252288@web94712.mail.in2.yahoo.com
cid:5.3205252288@web94712.mail.in2.yahoo.com
cid:6.3205252288@web94712.mail.in2.yahoo.com
cid:7.3205252288@web94712.mail.in2.yahoo.com
cid:8.3205252288@web94712.mail.in2.yahoo.com
cid:9.3205252288@web94712.mail.in2.yahoo.com.
cid:10.3205252288@web94712.mail.in2.yahoo.com
cid:12.3205252288@web94712.mail.in2.yahoo.com

Sunday, July 31, 2011

புனித ரமளானை வரவேற்போம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

"இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!" ( அல்குர்ஆன் 2:183)

நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)

ரமழானின் சிறப்பு
இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:
  •   இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,
  •  ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்   நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
  • - ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது. எனவே
  • குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,
  • - நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக
  • மணமுடையது,
  • - இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.
  • மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்
ரமழானில் அமல்கள்
ரமழானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:
1. தூய்மையான நோன்பு

"இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது." (புகாரி, முஸ்லிம்)
வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்:

"பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை." (புகாரி)
"நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் "நான் ஒரு நோன்பாளி' என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)

2. இரவு நேரத் தொழுகை

நபி (ஸல்) கூறினார்கள்:
"இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" (புகாரி, முஸ்லிம்)
இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
"ரமழானிலும் ரமழானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்களுக்கு மேல் தொழுததேயில்லை" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)

3. தருமம்
 
"நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்" என்று கூறினார்கள். (திர்மிதி)
தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.
"நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்' என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)

4. குர்ஆன் ஓதுதல்

ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

5.இஃதிகாஃப்

நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

6. உம்ரா
 
"ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது

லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.

8. பாவமன்னிப்புக் கோருதல்

"நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது' என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18)
எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்டவை
நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும். இவற்றை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
  • -குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
  • நபி(ஸல்) அவர்கள் (ரமலான் இரவுகளில்) உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
  • - பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்கு பல்துலக்குவதில் தவறேதுமில்லை.
  • - உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். (பார்க்க : அபூதாவூத்)
  • - எல்லை தாண்டாத அளவிற்கு சுயக்கட்டுப்பாடு உள்ளவர் நோன்பு நேரத்தில் மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் கூடும். (பார்க்க : அஹ்மத்)
  • - இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல், பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவிக்
  • கொள்ளுதல், வாசனை திரவியங்கள் பூசுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும் நோன்பை முறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும் இல்லை.
அனுமதிக்கப்படாதவை
  • - உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயல்களாகும். (பார்க்க அல்குர்ஆன் 2:187)
  • எனவே இவற்றை ரமலானின் பகல் வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளி மறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)
  • - இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)
  • - வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள் ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சலுகையளிக்கப்பட்டவர்கள்
 
நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
(பார்க்க அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

தடைசெய்யப்பட்டவர்கள்
 
மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் சட்ட விதிகளைப் பேணி வழிபாடுகள் அதிகம் செய்து ஈருலகிலும் வெற்றியடைய முயற்சிப்போம், அல்லாஹ் மிக அறிந்தவன்.

இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்.

--

இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம்...பாதுகாப்புக் கோருகிறேன்...

Friday, July 22, 2011

மெரிட்- உதவித்தொகை திட்டம்


உதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும்




திட்டம் விவரம் : குறிக்கோள்: திட்டத்தின் நோக்கம் இன்னும் தொழில் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் தொடர செயல்படுத்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஏழை மற்றும் meritorious மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளது.

நோக்கம்: இந்த கல்வி உதவி தொகை மட்டுமே இந்தியாவில் ஆய்வுகள் உள்ளன மற்றும் இந்த நோக்கத்திற்காக அரசு / யூடி நிர்வாகம் நியமிக்கப்பட்ட ஒரு ஏஜென்சி மூலம் வழங்கப்படும்.

ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை:

ஒவ்வொரு வருடமும் 20000 கல்வி உதவி தொகை நாடு முழுவதும் சிறுபான்மை சமூகங்களின் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும். இந்த சமூகங்கள், புலமையின் விநியோகம் மாநில வாரியான popolation அடிப்படையில் கீழ் இருக்கும்:

Tamil Nadu
 
No. of Scholarship for Muslim

 366 
உதவித்தொகை நிபந்தனைகள்:



* நிதி உதவி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பட்டதாரி அளவிலான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகள் பட்டம் மற்றும் / அல்லது தொடர கொடுக்கப்படும். பராமரிப்பு உதவித்தொகை மாணவர் கணக்கில் வரவு இருக்கும். நிச்சயமாக கட்டணம் கவலை நேரடியாக புகைப்பிடித்தல் மாநிலம் துறை மூலம் வழங்கப்படும்.
 
* ஒரு போட்டி தேர்வின் அடிப்படையில் தொழில்நுட்ப / தொழில்முறை படிப்புகள், தொடர ஒரு கல்லூரிக்கு அனுமதி கிடைக்கும் மாணவர்கள் உதவித்தொகை தகுதி இருக்கும்



* எந்த போட்டி தேர்வு எதிர்கொள்ளும் இல்லாமல் தொழில்நுட்ப / தொழில்முறை படிப்புகள் சேர்க்கை யார் மாணவர்கள் உதவித்தொகை தகுதி இருக்கும். எனினும், அத்தகைய மாணவர்கள் குறைவாக 50% மதிப்பெண்கள் பட்டம் / மேல்நிலை மட்டத்தில் கூடாது. இந்த மாணவர்கள் தேர்வு கண்டிப்பாக தகுதி அடிப்படையில் செய்யப்படும்.



* பயனாளியின் / பயனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து ஆதாரங்களில் இருந்து Rs.2.50 லட்சம் தாண்ட கூடாது.


மேலும் விவரங்களுக்கு :






Thursday, July 21, 2011

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?

ஏ' பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு
இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

Monday, July 18, 2011

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள் !!!!

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப் படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடு பவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின்


கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.


" மேலும், உங்களுடைய பொருட் களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களி லிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்."  (அல்குர்ஆன். 2:188)


இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும்


" வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்."  (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின் றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

 
ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

Monday, July 4, 2011

இறுதித் தீர்ப்பு நாள் எப்போது?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், மறுமை நாள் – இறுதித் தீர்ப்பு நாள் என்ற அந்த நாள் நிச்சயமாக வரும் என நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்களில் மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருந்தார்கள். மறுமை வாழ்க்கையை அவர்களால் நம்ப முடியாமல் போனது, இந்த மண்ணுலக வாழ்க்கையைத் தவிர வேறு எந்த வாழ்க்கையும் இல்லை என்ற நம்பிக்கையும்தான் நபிமார்களையும் அவர்களின் போதனைகளையும் நிராகரிக்கும்படிச் செய்தது…

”இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்” என்று அவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன், 006:029)




”மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.” (திருக்குர்ஆன், 083:004 – 006)


இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் இறுதி நாளை மறுத்து வந்ததையும், அவர்கள் மறுப்புக்கு பதிலடியாக இறுதி நாள் நிச்சயமாக நிகழ இருக்கிறது என்று இறைவன் கூறியதையும் திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில் காணமுடியும். இறுதித் தீர்ப்பு நாள் எப்போது வரும் – எந்த நேரத்தில் சம்பவிக்கும் என்பது இறைத்தூதர்கள் உள்பட – மனிதர்கள் எவருக்கும் தெரியாது. அது பற்றிய ஞானம் இறைவனிடமே உள்ளது…


”நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன்.” (திருக்குர்ஆன், 020:015)


"அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது..” (திருக்குர்ஆன், 31:34)

மறுமை நாள் எப்போது வரும்”? என்றக் கேள்விக்கு அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது என்று 031:034வது வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். மேலும் ”மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்”? என்பது பற்றி இறைவன் எனக்கும் அறிவித்துத் தரவில்லை என்று பொருள்படும் வகையில் ”அதைப் பற்றிக் கேள்வி கேட்பவரை விட நான் அறிந்தவரல்ல” என்று தமக்கு மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பது தெரியாது என்று பதிலளிக்கிறார்கள்!


இறுதி நாள் எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றாலும் அந்த நாள் வருவதற்கு முன் நிகழவிருக்கும் சில சம்பவங்களை, அடையாளமாக, இறைவன் தனது தூதருக்கு அறிவித்திருக்கிறான். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் மனித சமுதாயத்திற்கு அதை அடையாளங்காட்டி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்…

இறுதி நாள் வருவதற்கு, முன் அடையாளமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல அறிவிப்புகள் செய்துள்ளார்கள். அதில் மிக முக்கியமானதாக 10 அடையாளங்களை அறிவித்திருக்கிறார்கள்.

1. புகை மூட்டம்

2. தஜ்ஜால்

3. (அதிசயமானப்) பிராணி

4. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.

5. ஈஸா (அலை) இறங்கி வருவது.

6. யாஃஜுஜ் மஃஜுஜ்

7,8,9. அரபு தீபகற்பத்தில் கிழக்கில் ஒன்று, மேற்கே ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது.

10. ஏமனிலிருந்து கிளம்பும் தீப்பிழம்பு மக்களை விரட்டி ஒன்று சேர்ப்பது.

”இந்த பத்து நிகழ்ச்சிகளையும் நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிட நேரத்தில் உலகெங்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கண்ட முன்னறிவிப்பு அடையாளங்களில் ஏதாவது ஒன்று எங்கு நடந்தாலும், நடந்து முடிந்தவுடன் அந்த செய்தி உடனடியாக உலகத்திற்கே செய்திகள் மூலம் தெரிந்துவிடும்.

மேலும், தஜ்ஜாலின் வருகை, நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவது, இவையெல்லாம் நிகழும் நேரத்தில் அந்த அதிசயங்கள் உலகெங்கும் அறிவிக்கப்படும். அதிலும் முக்கியமாக சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதை செய்திகள் இல்லாமலே ஒவ்வொருவரும் நேரில் காண முடியும். அதிசயப் பிராணி பற்றி திருக்குர்ஆன்…

”அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.” (திருக்குர்ஆன், 027:082)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிரினம், இறுதி நாளுக்கு முன்பு, இறுதி நாளின் அடையாளமாகத் தோன்றும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த அதிசயப் பிராணி தோன்றி மனிதர்களிடம் பேசினால் அதுவும் மிக அதிசயமாக உலகிற்கு அறிவிக்கப்படும்.














Friday, June 17, 2011

விபரீத ஆலோசனை

 உலக வங்கிக்கு இந்தியா மீது அளவற்ற பாசம். அதனால்தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக அவ்வப்போது ஏதாவது ஓர் ஆலோசனையை இந்திய அரசுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.


"மாறிவரும் இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு- உலக வங்கி அறிக்கை' மே 17-ம் தேதி வெளியானது. இந்த அறிக்கையின் பரிந்துரை என்னவென்றால், இந்திய அரசு பொது விநியோகத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதுதான்.  பொதுவிநியோகத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, நியாயவிலைக் கடைகளை மூடிவிட்டோமானால், மக்களுக்கு எப்படிக் குறைந்தவிலையில் இன்றியமையா உணவுப் பொருள்கள் கிடைக்கும்?

"மானியத்துக்கு ஈடாக அவர்களிடம் பணத்தைக் கொடுங்கள்' என்கிறது உலக வங்கி. எவ்வளவு கொடுக்கலாம் என்பதையும் உலக வங்கியே சொல்கிறது. அதாவது, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பத்தின் பெண்மணிக்கு, ரூ.1,100 கொடுங்கள்.  இந்தப் பரிந்துரையை நியாயப்படுத்த உலக வங்கி சொல்லும் காரணத்தைக் கேட்டால், நமக்கும்கூட முதலில் இது நல்ல யோசனையாகத் தான் தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து நிதானமாக யோசிக்கும்போதுதான், இது எவ்வளவு முட்டாள்தனமான, இந்திய எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத யோசனை என்பது புரியும்.  இந்தியா முழுவதிலும் உள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ளவர்களுக்கு மானிய விலையில் கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை ஆகியன வழங்கப்படுகின்றன. இப்பொருள்களை அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக அரசுக்கு ஏற்படும் மானியச் செலவு ரூ.45,000 கோடி. இதில் 60 விழுக்காடு உணவுப்பொருள்

கடத்தல்காரர்களால் வெளிச்சந்தைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அதனால் ரூ.27,000 கோடி வீணாகிறது. ஆகவே, யார் பயனாளியோ அவர்களுக்கு அதிகவிலையில் விற்கப்படும் சர்க்கரை, அரிசி, கோதுமை வாங்குவதற்காக மாதம் ரூ.1,100 கொடுத்துவிட்டால் போதும். நேரடியாக ஏழைகள் பயன்பெறுவார்கள் என்பது உலக வங்கிஅறிக்கையின் வாதம்.  தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி முற்றிலும் இலவசமாகவும் மற்ற மாநிலங்களில் விலை குறைவாகவும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்படுவதால், ஏழைகள் ஏதோ வேளைக்குக் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். கையில் காசைக் கொடுத்து, மிச்சத்தை நீங்களே போட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் நிலைமை வந்தால், பெரும்பாலான குடும்பங்களில் அந்தப் பணத்தைப் பறித்துக் கொண்டுபோய் மது குடித்து, சூதாடி, ஊதாரித்தனமாகச் செலவு செய்பவர்கள் இந்தியக் கணவன்மார்களாகத்தான் இருப்பார்கள்.

பெண்களும், குழந்தைகளும் பட்டினியில் கிடக்கும் நிலைமை உருவாவது மட்டுமல்ல, குற்றங்களும் அதிகரிக்கும்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எவ்வளவுதான் ரேஷன் அரிசி கடத்தப்பட்டாலும், எவ்வளவுதான் குறைந்தவிலை மளிகைப் பொருள்கள் வெளிச்சந்தைக்கு வந்தாலும், எவ்வளவுதான் மண்ணெண்ணெய் ஊற்றும் தேதியைத் தள்ளிப்போட்டு ஏமாற்றி, கொஞ்சம் திசைதிருப்பப்பட்டாலும், தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் இன்னமும் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 

பொது விநியோக முறையில் நிச்சயமாகக் குறைகள் இருக்கின்றன. குறைகள் இருப்பதால்தான் தினமும் ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்குகின்றன. ஆனால், இவ்வாறு பிடிபடும் ரேஷன் அரிசி மூட்டைகளில் 90% ஏழைகளை ஏமாற்றிய அரிசி அல்ல. வசதி படைத்தவர்கள் வாங்காமல்விட்ட அரிசி.  வாங்காமல் விட்ட அரிசிக்குத்தான்,

முறைகேடாகக் கணக்கு எழுதப்பட்டு, அரிசிஆலையில் மறுஅரைவை (இதைக் கடத்தல்காரர்கள் பாலிஷ் போடுதல் என்கின்றனர்) செய்து வெளிமாநிலங்களில் விற்கிறார்கள். இதன் மூலம் கடத்தல்காரர்களுக்கு, ஒரு கிலோ அரிசிக்கு, (லஞ்சம் கொடுத்ததுபோக), ரூ.7 முதல் ரூ.10 வரை லாபம் கிடைக்கிறது. மற்ற பொருள்களான பாமாலின், சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியன வெளிச்சந்தையில் ஏற்படும் விலைவேறுபாடுகளைப் பொறுத்து கடத்தலின் அளவு குறையும் அல்லது கூடும்.  அரசின் நடவடிக்கை என்பது, வசதி படைத்தவர்கள் வாங்காமல் விட்ட பொருள்கள், மீண்டும் ஏழைகளுக்கே கிடைக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அதற்குக் கணக்குத் தணிக்கை மிகவும் கடுமையாக இருத்தல் வேண்டும்.  ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை 250-க்கு மிகாமல் பார்த்துக் கொண்டு, யார்யார் என்னென்ன வாங்கியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக நுகர்வோர் பார்க்கும்படி செய்ய வேண்டும். பொதுவிநியோகக் கடைகள் அனைத்திலும், அரிசி, பருப்பு அனைத்தையும் பை அல்லது பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கும் முறை அமலுக்கு வரவேண்டும். நுகர்வோர் எடையைச் சரிபார்க்க மின்னணு தராசு இருக்க வேண்டும்.

பொருள்களை அட்டைதாரரின் விரல்ரேகைப் பதிவுக்குப் பின்னரே வழங்கும் நிலையை உருவாக்க வேண்டும். நியாயவிலைக் கடைகள் கணினிகள் மூலம் இணைக்கப்பட்டு, துல்லியமான கையிருப்பு, விநியோகம் கண்டறியப்படவேண்டும். இவற்றைச் செய்தாலே பொதுவிநியோகத்தில் முறைகேடுகள் 99 விழுக்காடு குறைந்துவிடும்.  இதைவிடுத்து, பொதுவிநியோகத் திட்டத்துக்கு முடிவு கட்டிவிட்டு, பணப் பரிவர்த்தனை (தில்லியில் இதைப் பரிசோதனை அடிப்படையில் செய்கிறார்கள். அதற்குப் பெயர் "பரிவர்த்தனை') செய்வது இந்தியாவுக்கு ஏற்புடைய ஏற்பாடாக அமையாது. நோயாளியைப் பார்க்க வருகிறவரெல்லாம், இந்த நோய்க்கு இன்னார் இந்த மருத்துவத்தால் குணமடைந்தார் என்று சொல்வார்கள்தான். அதற்காக, அதையெல்லாம் நடைமுறைப்படுத்த முயல்வது எவ்வளவு முட்டாள்தனமோ, அதுபோலத்தான் உலக வங்கியின் ஆலோசனையை நாம் ஏற்றுக்கொள்வதும்.  இந்தியாவில் தென் மாநிலங்களிலும், சில வட மாநிலங்களிலும் தவிர, பெருவாரியான மாநிலங்களில் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளாகியும் இன்னும் முறையான பொது விநியோக முறை இல்லை. இதுதான் தீவிரவாதம் பரவுவதற்கான காரணிகளில் ஒன்று. பொது விநியோக முறையைப் பலப்படுத்தி, பரவலாக்கி, சீர்படுத்துவதை விடுத்து, முற்றிலுமாகச் சிதைப்பது என்பது "பட்டினிப் போராட்டத்தை' வலிய வரவழைக்கும் ஆபத்தான முடிவு. உச்ச நீதிமன்றம் அரசின் உணவுக் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் தானியங்களை வீணாக்காமல் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு விநியோகிக்கச் சொன்னால், விநியோக முறையையே சீர்குலைக்கச் சொல்கிறது உலக வங்கி. 

உலக வங்கி கடன் கொடுத்து வசூலிப்பதுடன் நிறுத்திக் கொள்ளட்டும். நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்வோம். போதும் இவர்களது விபரீத ஆலோசனைகள்!    



Govindakudi Mosque

zakat calculator